Tuesday, September 6, 2011

பொன்னைப் போல ஆத்தா

"என்னை விட்டுப் போகாதே" திரைப்படத்தில் ராமராஜன் பாடுவதாக வரும் "பொன்னைப் போல ஆத்தா" பாடல் நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. கர்நாடக சங்கீத கச்சேரிகளில் மட்டுமே பயன்படுத்தப் படும் 'முகர்சிங்' இசை கருவியின் இசையுடன் தொடங்குவது இப்பாடலின் சிறப்பு

உன்னை போல ஆத்த
என்னை பெத்து போட்ட
என்னை பெத்து ஆத்தா
கண்ணீரா தான் பாத்தா
சொல்லி சொல்லி ஆரது சொன்னள் துயர் தீறது

திட்டி திட்டி பேசி நாலும்
வட்டியில சோறு வப்பா
ஒட்டிபோன ஒடம்புன்லும்
உசுரா கேடுத்து பாசம் வப்பா
திண்னை வாயில் திட்டினலும்
என்னை அவா நெத்தயில்ல
காந்தள் துனி கட்டினலும் கண் கசங்கா பார்த்தயில்லை
பொன்னா கேட்டும் வாயில் ஒரு சேலை கேட்டா அத்தா
நூலா கூடா நான் உனக்கு வாங்கிதந்தயில்லா ஏ..... அததா (உன்னை )

வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை

உன்னை போல ஆத்த
என்னை பெத்து போட்ட
என்னை பெத்து ஆத்தா
கண்ணீரா தான்ப்பாத்தா



Friday, September 2, 2011

காந்தியம்

காந்தி பிறந்தபோது நமது நாட்டில் நாற்பது கோடி அடிமைகள். அவர் மறைந்தபோது நாற்பது கோடியும் சுதந்திரப் பறவைகள். இந்த மாற்றமே அவர் நிகழ்த்திய அதிசயம். ஒரு தனி மனிதரின் வாழ்க்கை தரணியின் ஒரு பகுதி மக்களின் தலைவிதியை தலைகீழாக மாற்றியது. இந்த மாற்றத்தின் அடித்தளம் ஆன்மீகம் என்பது இந்த மனி குலத்தின் பலம் மட்டுமல்ல பெருமையும் கூட.
ஒரு தனிமனிதனின் ஆன்மீக பலத்தை விஞ்ஞானத்தின் கருவிகள் வெல்ல முடியாதென்று பரீட்சாத்தமாக நிரூபித்தவர் மகாத்மா காந்தி. இந்த நிரூபனம ஐன்ஸ்டைனை வெகுவாகக் கவர்ந்தது. ஐன்ஸ்டைனின் வரவேற்பு அறையை இரண்டு புகைப்படங்கள் அலங்கரித்தன. அவைகளின் ஒன்று மகாத்மா மற்றொன்று அவரது விஞ்ஞான குரு ஐசக் நியூட்டன். உலகில் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் எங்கு நடந்தாலும், அவைகளுக்கு காந்தியப்பாதை அடித்தளமாக அமைந்தது.

மார்டின் லூதர், இனவெறிக் கொடுமைகளுக்கு எதிராக அமெரிக்க நாட்டில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தியபோது அப்போராட்டத்தின் அடித்தளமாக அவர் காந்தியத்தை அமைத்தார். “எனது போராட்டத்தின் பாதையை வகுத்தவர் ஏசுபிரான். அந்தப் பாதையில்